Friday, May 23, 2014

என்னை நம்பினால் 100 சதவீத வெற்றி கிடைக்கும்!

Image

என் பெயர் அருள் ஜோதி. எனது கணவர் ரவிச்சந்திரன். எங்களுக்கு ஜெயஸ்ரீ மற்றும் நித்யஸ்ரீ_ என்று இரண்டு மகள்கள். எங்கள் நண்பர்கள் மூலம் பாபாவின் பெருமையை கேள்விப்பட்டு, அவரை  வணங்க ஆரம்பித்தோம்.



எனது கணவர் டிப்ளமோ முடித்திருந்தார். பார்ட்டைம் பி.ஈ, படிப்பில் சேர முயற்சித்து வந்தார். அதற்கு பல தடங்கல்கள் இருந்தன. கம்பெனியில் வேலைப்பளு மற்றும் பார்ட் டைம் பி.ஈக்கான போட்டி ஆகியவற்றால் அது தள்ளிப் போனது.



நடக்கிற அனைத்திற்கும் பாபாவே பொறுப்பு என மனதில் திண்ணமாக நினைத்துக்கொண்டு தீவிரமாக முயற்சி செய்தோம். சத்ய பாமா பல்கலைக் கழகத்தில் சீட் கிடைத்தது.



சீட் கிடைத்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் என் கணவருக்கு வேலை போய்விட்டது. இது பாபாவின் சோதனைதான் என உணர்ந்து அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டுவிட்டோம்.



நடக்கிற அனைத்தையும் அனுபவிப்போம் என நினைத்து பாபாவை தியானிக்க ஆரம்பித்தேன். சில நாட்களுக்குள் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அது மட்டுமல்ல, எனது கணவருடைய நெருங்கிய நண்பர் வந்து, தான் நடத்தி வந்த தொழிலை ஏற்று நடத்துமாறு எனது கணவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.



தொழிலில் ஆரம்பத்தில் அனுபவமின்மை காரணமாக சில தோல்விகளும், உறவினர்களை நம்பியதால் சில இழப்புகளும் ஏற்பட்டன.



ஒவ்வாரு முறையும் பாபா எங்களை காப்பாற்றி வழி நடத்திச் சென்றார். இப்போது தடைகள் அனைத்தையும் கடந்து நல்ல நிலையில் எங்கள் தொழில் நடந்துகொண்டிருக்கிறது.



என் கணவருக்கு பி.ஈ சீட் கிடைத்தபிறகு ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக, மீண்டும் புதிய கம்பெனியில் சேர்ந்த பிறகு, தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே நிறைய நேரங்களை அவர் செலவிட வேண்டியிருந்தது. இதனால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.



இதனால் அவரது ஆறாவது செமஸ்டரில் மூன்று செமஸ்டர் பேப்பர் முழுவதும் சேர்த்து எழுத வேண்டிய கட்டாயம். அனைத்தையும் பாபாவிடம் ஒப்படைத்து விட்டு கடினமாக உழைக்க எனது கணவருக்கு உறு துணையாக இருந்தேன்.



என்ன ஆச்சர்யம்!  அனைத்து பேப்பரிலும் வெற்றி என கணவர் சொன்னபோது, கண்கள் ஆனந்த கண்ணீரை  வடித்தது. வாரக் கடைசி மற்றும் சனிக்கிழமை விடுப்பு என கம்பெனியில் எனது கணவர் நிறைய விடுப்பு எடுத்ததால் எங்களால் சீரடி வர இயலவில்லை.



பிஈ முடிந்ததும் சீரடி வருவதாக பாபாவிடம் சொல்லியிருந்தேன். அதன்படி டிசம்பர் 13 - ல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்தது. ஜனவரி 22 – ம் தேதியில் செல்ல முன் பதிவு செய்திருந்தேன்.



என்னை பார்க்கும்போது பி.ஈ டிகிரி வாங்கியிருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல, 18 – ம் தேதியே  தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நூறு சதவிகித வெற்றியுடன் அவரை தரிசிக்கச் சென்றேhம்.



 அருள்ஜோதி ரவிச்சந்திரன்,



மடிப்பாக்கம், சென்னை -  91

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...