Saturday, May 10, 2014

சாயி புத்ரன் பதில்கள்

Image

 

கர்மா என்பதை புரியும் படி சொல்லுங்களேன்.
(கே. மகேஷ், சென்னை - 60)
ஒரு செல்வந்தர் வீட்டில் வறியவன் ஒருவன் வேலை செய்துவந்தான். முதலாளிக்கு உண்மையான விசுவாசி. அவனை கொல்லைப் புற வழியாக வரவழைத்துதான் பேசுவார் செல்வந்தர். வீட்டில் மீதமான பழைய சாதத்தை கொல்லைப்புறத்தில் வைக்கப்பட்ட பழைய பாத்திரத்திலிட்டுக் கொடுப்பார்.
தனக்காக உழைப்பவனாயிற்றே என்ற எண்ணம் ஒருபோதும் அவருக்கு வந்ததில்லை. அவன் விதி அப்படிப்பட்டது என்று நினைப்பார் போலும்.
ஒருநாள் செல்வந்தரும் அவரது வேலைக்காரனும் இறந்துபோனார்கள். அவர்களது பூர்வ ஜென்ம நன்மை தீமைகளை இறைவன் கணக்கிட்டு, வேலைக்காரனை செல்வந்தர் மகன் வயிற்றிலும், செல்வந்தரை வேலைக்காரர் மகன் வயிற்றிலும் பிறக்க வைத்தார்.
அது மட்டுமல்ல, பூர்வ நினைவுகளையும் கொடுத்து வைத்தார். தன் வீட்டுக்கு ஏழ்மைக்கோலத்தோடு வரும் தனது முதலாளியைப் பார்த்து, செல்வச்செழிப்பில் இருக்கும் அந்த வேலைக்காரன், எழுந்து நின்று மரியாதை செலுத்துவான்.
என் இடத்தில் இருக்கிறாயா துஷ்டனே என பழைய முதலாளி வந்து இவனை கொட்டகைக்குத்துரத்துவான். இதை கவனிக்கும் செல்வந்தன் பிள்ளை, தனது பூர்வத் தந்தையாகிய வேலைக்காரக் குழந்தையை அடித்து, கொட்டகைக்கு விரட்டிவிட்டு, இப்போதைய தனது குழந்தையாகிய பூர்வ வேலைக்காரனை தூக்கி வைத்துக் கொஞ்சுவான். பூர்வ நினைவு இருப்பதால், வேலைக்காரக் குழந்தை, தான் தான் அவனது தந்தை என எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அங்கே அவன் பேச்சு எடுபடாது.
இதுதான் கர்மா என்பது..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...