Friday, May 23, 2014

எங்கும் நிறைந்தவர் பாபா!

ac821-sridisaibaba



பாபா இந்த பூலோகத்தில் மட்டுமல்ல, மற்ற உலகத்திற்கும், பூலோகத்தில் வெகு தூரத்திற்கும் சென்று வந்துள்ளார். காலை வேளையில் துனியிடம் அமர்ந்திருக்கும்போது, மற்ற பக்தர்களிடம் நேற்று இரவு, தான் எங்கெங்கு சென்றேன், என்ன செய்தேன் என்பது பற்றி சொல்வார். ஆனால் மசூதியிலும் சாவடியிலும் அவரோடு தூங்கியவர்கள் இரவு முழுவதும் பாபா அங்கேயே தூங்கினார் என்பார்கள்.



அந்தந்த இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை, பாபாவுடைய பேச்சுடன் வைத்து சோதித்துப் பார்த்தால் பாபா சொல்வது சரியாக இருக்கும்.



ஒருநாள் சீரடியில் மார்வாடி ஒருவரின் மகன் இறந்து விட்டான். ஈமச்சடங்கு முடித்துவிட்டு சோகத்துடன் மசூதிக்கு வந்தனர். அப்போது பாபா அந்தப் பையன் நதிக்கு அருகில் செல்கிறான், நதியைக் கடந்து விட்டான் என்றார். அவர் குறிப்பிட்டது, நரகத்தின் பக்கத்திலுள்ள வைதாரணி நதியைத்தான்.



பாபா, பக்தர்கள் சூழ்ந்திருக்கும்போது யாராவது ஒருவருக்கான செய்தியைச் சொல்வார். மற்றவருக்குப்புரியாது. ஆனால், யாருக்காக சொல்கிறாரோ அவருக்குத்தெரிந்துவிடும். அப்படித்தான் எனது நான்கு முந்தைய பிறவி பற்றியும், அதில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் கூறினார். எனக்கு மட்டுமே புரிந்தது. அவருடைய சொல்லும் செயலும் நிறைய பேருக்கு நன்மையையே செய்தது.



திடீரென்று என்னிடம், ”நீ எங்கே இருக்கிறாய்?  நான் எங்கே இருக்கிறேன்? இந்த உலகம் எங்கே உள்ளது ” எனக் கேட்பார். சில சமயம், தனது உடலைக் காட்டி, “இதுதான் எனது வீடு. நான் இங்கு இல்லை. எனது குரு மௌர்ஷாத் என்னை எடுத்துச் சென்று விட்டார்” என்பார்.



பெரும் உண்மை என்னவென்றால், சாய் பாபா இன்றும் வாழ்கிறார். அன்று எங்கிருந்தாரோ, இன்றும் அங்கே வாழ்கிறார். அன்றும் வாழ்ந்தார், இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். இவ்வுலகிலும் மற்ற உலகிலும் தனது செயல்பாடு என்ன.. தான் இறந்து போன ஆன்மாவின் விதியை எப்படி கட்டுப்படுத்தினேன் எனக் கூறுவார்.



பாபாவின் வார்த்தைகள் என்றும் பொய்த்தது இல்லை. புரியாத -  அர்த்தமற்ற வார்த்தைகளையும் பேசியதில்லை. இது எல்லோருக்கும் புரியாது, நான் புரிந்துகொண்டேன்.





கு.இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...