Friday, May 2, 2014

முக்தி மார்க்கம்

Image

முக்தி அடைவதற்காக நான்கு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை.

இதில் சரியை என்பது தாச மார்க்கம். பகவானுக்கு அடிமை செய்து அவன் பதத்தை அடைய நாடுவது. இதை சாலோகம் என்பார்கள். ஒழுக்கமாக நடந்து வழிபடும் இந்த நிலையால் சாலோகம் என்னும் நிலையான பகவானின் உலகத்தை அடையலாம்.

சற்புத்திர மார்க்கத்திற்கு கிரியை என்று பொருள். தனது வழிபடு கடவுளை அகத்தும், புறத்தும் பூசித்து வழிபடுகிற நிலைதான் சற்புத்திர நிலை. இதை கிடைய என்பார்கள். இதனால் சாமீபம் கிடைக்கும். இறைவனின் அருகிலிருக்கலாம்.

யோக மார்க்கத்திற்கு சக மார்க்கம் என்று பெயர். இதனால் சாணுபம் என்ற பதவி கிடைக்கும். அதாவது இறைவனின் திருவுருவம் போன்ற ஓர் உருவம் தாங்கி, இறை இன்பத்தை நுகர்தல்.

ஞானம் என்பது இறுதி நிலையான சன்மார்க்கம். இதையே சாயுஜ்ஜியம் என்பார்கள். அதாவது இறைவனோடு இரண்டாகக்கலந்து பிரியாது அவனைப் பெறுகிற நிலை.

மூன்று நிலைகளில் இறைவனின் பதத்தை அடையலாம். இறுதி நிலையில் பர முக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...