Monday, May 12, 2014

பாபாவின் அடியார்கள்!

Image

 

பாபாவின் அடியார்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி, உயர் அதிகாரி, கடைநிலை ஊழியர் என்ற பாகுபாடு கிடையாது. அவர் எல்லோரையும் சமமாகவே நடத்தினார்.



நானாசாகேப் சந்தோர்க்கர் ஆங்கில அரசில் உயர் அதிகாரி. கபர்டே அமராவதியில் பெரும் பணக்காரர், புகழ் பெற்ற வக்கீல். சிறந்த அறிவாளி. பஞ்சதசியைப் படித்து விளக்கம் சொல்வதில் நிபுணர்.



தீட்சித் மும்பையில் திறமைமிக்க சட்ட நிபுணர்.  ஆங்கில அரசாங்கம் திலகர் மீது குற்றம் சுமத்திய போது அவருக்காக வாதாடியவர். மிக்க வசதி படைத்தவர். பாபா சொல்லை வேத வாக்காகக் கருதியவர்.



எம்.பி. ரேகே, இந்தூரில் நீதிபதி. மகல்சாபதி ஒரு பொற்கொல்லர். கந்தோபா ஆலயத்தில் அர்ச்சகர். வறுமையான வாழ்வு. இவர் மற்றவர்களிடம் பணம் பெறுவதைக் கூட தடுத்தவர் பாபா. இதற்கான காரணம், பாபாவுக்கு மட்டுமே தெரியும்.



மகல் சாபதி 14 ஆண்டுகள் பாபாவுடன் இரவில் படுத்து உறங்கியவர். அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தன்னோடு இரவைக் கழிப்பதைத் தவிர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அடுத்த ஓர் ஆண்டில் ஆண்வாரிசு கிடைக்கப் பெற்றார்.



தாசகணு மகராஜ், போலீஸ்காரர். கீர்த்தனைக்காரர். பாபாவின் புகழைப் பரப்புவதில் இவரும் நானா சாகேப் சந்தோர்க்கரும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். படிப்பறிவு குறைவு, ஆனால் ஈசா உபநிடதத்திற்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு பாபா இவரை உயர்த்தி விட்டார்.



மாதவ்ராவ் தேஷ்பாண்டே (சாமா), சீரடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர். பாபாவைப் பார்த்து, இவர் இரவில் ஏதேதோ உளறுகிறார், பாபா ஒரு பைத்தியம் என்றவர். ஆனால், பின்னாளில் சிவபெருமானுக்கு ஒரு நந்தி தேவர் மாதிரி பாபாவுக்கு நெருக்கமாகி விட்டார். பாபாவின் ஆசியால் விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கற்று பேராசிரியர் ஜி.கே. நார்கேவுக்கு விளக்கம் தரும் அளவுக்கு அதில் புலமை பெற்றுவிட்டார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...