Saturday, May 10, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 6

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 ஆத்ம விசாரணை செய்யவேண்டும்



பாபா சொன்னார்: “போய் உம்மிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மலிவாகவே வாங்கலாம். ஆனால் உலகமெங்கும் தேடினாலும் ஆத்ம விசாரம் செய்யும் ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கடினம்.”



ஆத்ம விசாரம் என்பது, என்னைப் போல இவர்களும் நன்மை அடையவேண்டும் என நினைப்பது. மழை எல்லோருக்காகவும் பொழி கிறது,



சூரியனும் சந்திரனும் எல்லோருக்காகவும் ஒளிர்கின்றன. இருள் எல்லோருக்காவும் சூழ்கிறது. காற்று எல்லோருக்காகவும் வீசுகிறது. மண் எல்லோரையும் தாங்குகிறது. நெருப்பு எல்லோருக்காகவும் எரிகிறது. இதுதான் ஆத்ம விசாரம்.



தனது சேவையில் எதையும் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! என்றார்கள்.



யாதும் ஊரே! யாவரும் நண்பர்! என்றார்கள். என்னாடு, என் மக்கள் என்றார்கள். எவ்வெவ்வுயிரும் என்னுயிரே என்றார்கள். உன்னைப் போல பிறனை நேசி என்றார்கள். அன்பே சிவம் என்றார்கள்.



இப்படி, அன்பால், அரவணைப்பால், இரக்கத்தால், கருணையால் பிறரை உண்மையாக நேசித்து அவர்களுக்கு உதவுவதுதான் ஆத்ம விசாரம்.



இவற்றையெல்லாம் நீ சரியாகச் செய்வாயானால், செய்ய முயற்சிப்பாயானால் அதுவே நீ சாயி பக்தனாக இருப்பதற்கானத் தகுதி. இந்த தகுதியை பெற்றுவிட்டால் உன்னை விட்டு இமைப்பொழுதும் பாபா நீங்கவே மாட்டார்.



      ஜெய் சாய்ராம்!                                                                                                                                        சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...