Thursday, May 29, 2014

உயிர் காத்த பாபா!

25125



எனது மகன் சிவபாஸ்கரன் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்.



நாளுக்கு நாள் அவன் உடல் நலம் குறைந்துகொண்டே வந்தது. உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையும் குறைந்து வந்தது. மருத்துவமனையில் எனது மகனோடு இருந்தபோது, எனது இரண்டாவது மகன் வந்து, வீட்டுக்குப் போகுமாறு என்னை அனுப்பிவிட்டான். வீடு வந்து பாபாவிடம் மன்றாடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.



பத்து  நாட்கள்  பூஜை செய்தேன். அவன் என் மகனில்லை, உங்கள் மகன். நீங்கள் என்ன செய்தாலும் சம்மதம் என்று பாபாவிடம் பொறுப்பை விட்டு விட்டேன். பாபாவின் அற்புதத்தால் எனது மகன் உயிரோடு திரும்பி வந்தான். அது மட்டுமல்ல, அதன் பிறகு அவன் வாழ்வில் நல்ல காலம் பிறந்து, வீடு வாங்கினான். அவனது மகன் பி.ஈ. முடித்தான். குடும்பம் நல்ல நிலையில் உள்ளது.



என் பாபாவின் அற்புதங்களை வார்த்தையாலோ, பேச்சாலோ வர்ணிக்க இயலாது. அவரது கருணை கடலிலும் பெரிது. என் உடல் உயிர் அனைத்தும் அவருக்கே சொந்தம்.



அவருக்கு எனது நமஸ்காரங்கள்.



சகுந்தலா,

சக்திநகர், முடிச்சூர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...