சீரடி குக்கிராமமாக இருந்தபோது, பாபா கூறியது போல, எதிர்காலத்தில் இந்த ஊர் பாபா பக்தர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் ஊராக மாறும் என்றும், மக்கள் திரள் திரளாக இந்த ஊரை நோக்கி ஆன்மிகப் பயணம் வருவார்கள் என்றும் சாயி வரதராஜன் கூறியபோது, காசிலி சுவாமி சாய் சக்தி சுப்ரமண்யம் அவர்களும், ”அப்படித்தான் ஆகும்” என்று வழி மொழிந்தார்.
பாபா மாஸ்டர் அருணாச்சலம், இந்த ஊரைப் பற்றி சொல்லும்போது, ”எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், இருந்தாலும் அவையெல்லாம் கிள்ளுக்கீரை போல கிள்ளப்படும் இடமாக இந்த இடம் மாறும். பாபாவின் ஆகர்ஷண சக்தி இந்த இடத்தில் அதிகமாக உள்ளதால், யாரெல்லாம் இந்தப் புனிதத் தலத்தில் தடம் பதிக்கிறார்களோ, அவர்களது வாழ்வில் திருப்பு முனை நிச்சயம் ஏற்படும்” என்றார்.
இங்கு ஏற்படப் போகும் சிறப்பு என்னவெனில், ஒரே ஊரில் இரண்டு இடங்களில் பாபா தொடர்பான ஆலய அமைப்புகள் உருவாவதுதான்.
No comments:
Post a Comment