தியானம் என்பது யோக மார்க்கத்தில் ஒரு படி நிலை. இதில் இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிராத்தியாகரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகைகள் உள்ளன. இதனைத்தான் அட்டாங்கயோகம் என்கிறார்கள்.
இமயம் என்பது தன்னை அடக்குவதாகும். தன்னை அடக்குவதாவது் அகிம்சை, உண்மை, களவுசெய்யாமை, பிறர் பொருள் விரும்பாமை, பிரம்மச்சர்யம் என ஐந்து வித விக்ஷயங்களைத் தவறாது கடைப்பிடிப்பதாகும்.
நியமம் என்பது தவம், சுத்தம், திருப்தி, ஞானநூல் ஆராய்ச்சி, ஈஸ்வர ஆதாரனம் என ஐந்து வகைகளைப் பின்பற்றுதல். இவற்றையெல்லாம் செய்த பின் தியானம் செய்வதுதான் முறை. மற்றவை பெயருக்காகச் செய்யப்படுபவை.
No comments:
Post a Comment