Wednesday, May 7, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 3

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்:



 



நிறைய பக்தர்கள் படிக்கிறார்கள், ஆனால் அதைப்பின்பற்றுவதில்லை. மேலோட்டமாகப் படிப்பதால் மனம் சுத்தமாகாது, விக்ஷயமும் தெரியாது. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.



அந்தக் காலத்தில் நிறைய மகான்கள் விஷ்ணு சகஸ்ர நாமாவளியைக் கொடுத்து மக்களைப் படிக்கவைத்தார்கள். விஷ்ணு சகஸ்ர நாமா வளியைப்படிப்பதோ, பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்து கொள்வதற்கு சுலபமான நேர்வழிப்பாதையாகும்.



நால்வர் தேவாரத்தில் சிவனைப் போற்றுகிற போற்றிகள் நிறைய உள்ளன. இவற்றை பாராயணம் செய்தார்கள். நமக்கு இவை வேண்டா எனத் தோன்றினால், சாயி சத்சரித்திரம் உள்ளது.



இதை வார்த்தை வார்த்தையாகப் படிக்கவேண்டும். படித்தால் மனம் சுத்தமாகிவிடும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...