Thursday, May 8, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 4

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 மென்மையானவராக மாறவேண்டும்:



ராமதாசியைப் பற்றி சாமா என்ன சொன்னார் பாருங்கள்: அந்த ராமதாசி, இயற்கையாகவே துஷ்டர், முன்கோபி, பிடிவாதக்காரர், சுலபமாக டென்ஷனாகிவிடுபவர். சந்தேகப்படுபவர்.



அவரைப் பற்றிய பிற சான்றுகளைப் பாருங்கள்: ராமதாசி ஒரு முரட்டு மனிதர். அண்ணா பாபரே என்பவர் சொன்னதைக்கேட்டு சாமாவிடம் சண்டைக்குப்போனவர். அதாவது அடுத்தவர் சொல்லைக் கேட்டு நடப்பவர்.



அவரைப் பற்றி பாபா என்ன சொன்னார் பாருங்கள்: சண்டை விரும்பி, மென்மையாகவும், இனிமையாகவும் பேசாதவர், எந்நேரமும் போதி படித்தும் அசுத்த மனம் உள்ளவர். உலகியல் பொருட்களை உதாசினம் செய்யாதவர். அடம் பிடிப்பவர். கடவுளே சொன்னாலும் கேட்காதவர். இப்படிப்பட்டவர் ராம பக்தராக இருப்பதில் என்ன பிரயோசனம்? ராமனுக்கு அல்லவோ இழுக்கு? நீங்களும் பாபாவை வழிபடுவதாகச்சொல்லிக்கொண்டு, ராமதாசி போல நடப்பதால் யாருக்கு இழுக்கு? பாபாவுக்குத்தானே சாயி பக்தர் என்பவர் சாயியைப் போல மாறவேண்டும். சாயி எப்படிப்பட்டவர்?



தாயினும் சாலப் பரிந்தவர். கருணையே வடிவானவர். பாவத்தின் மீது கோபப்பட்டு, புண்ணியத்தைச்சேர்க்கிறவர். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல, எல்லோரையும் தாமாகப் பார்த்தவர். தனக்குக் கிடைத்ததை பேதமின்றி பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டவர். அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருந்தவர்.



மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா என்பார்கள். நீங்கள் நாமத்தைப் படிக்கப்படிக்க உங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். சாயி பக்தரான உமக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கவேண்டும். அது வெளியே தெரியவேண்டும். எல்லோரைப்போலவும் நடக்கக்கூடாது, அதில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் உங்கள் மனதில் மென்மையாக வெளிப்பட வேண்டும். அன்பு கலந்த மனம் உங்களில் படைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...