Monday, May 26, 2014

நம்பினால் அருள் செய்வேன்!

DSC_0005



எங்களது வாழ்க்கையில் பாபா எப்படி வந்தார் என்பது நினைவில்லை. எனது மகன் கல்லு}ரியில் சேர அவரிடம் முறையிட்டேன். அவர் சரியான வழியைக் காண்பித்தார்.



எங்கள் இடத்தில் ஒரு பிரச்சினையிருந்தது. அதையும் பாபா சரி செய்தார். பின் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்ந்தேன். வயிற்றில் கட்டியிருந்தது. அறுவை சிகிச்சை நடைபெற்று கர்ப்பப் பையை எடுத்து விட்டார்கள். அடுத்த ஒரு வாரமாக கடுமையான குளிர் காய்ச்சல்.



மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தபோது, கருப்பைப் பகுதியில் இரத்த உறைவு ஏற்பட்டு உள்ளதால் இப்படியாகிறது என்றார்கள். அதோடு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றார்கள்.



”என் அக்கா எனக்கு வேண்டும்!” எனக் கூறி., என் தங்கை மறு அறுவை சிகிச்சைக்கு என்னை கட்டாயப்படுத்தி சேர்த்தாள். எனக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை சாய் ராம் எழுதிக் கொண்டிருந்தாள்.



அறுவை அரங்கினுள் நுழையும் போதிலிருந்து சாயி ராம் என சொல்லிக்கொண்டிருந்தேன். மயக்கம் போடும்போது சாய் எனச் சொன்னது நினைவு இருக்கிறது. தெளிந்து கண் விழித்தபோதும் எனது உதடுகள் சாயிராம் என உச்சரித்தது. அப்போதுதான் சாயி பாபா என்னை இந்த நாமத்தை உச்சரிக்கவைத்தார் என்பதை உணர்ந்தேன்.



எங்களது இல்லத்திற்கு அருகில் இளம் தம்பதியர் இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு குழந்தையில்லை.  கர்ப்பம் ஐந்து மாதம் ஆறு மாதம் என நான்கு முறை ஏற்பட்டு கலைந்து போய்க் கொண்டிருந்தது. அவர் மிகவும் அவதிப்பட்டாள்.



பாபாவை நினைத்து அவரைப் பிடித்துக்கொள்..இந்த முறை கர்ப்பம் கலையாது என ஆறுதல் கூற, அவளும் பாபாவை பிடித்துக்கொண்டாள். மறுபடி கர்ப்பம் தரித்தாள்.. மூன்று மாதமான நிலையில் வயிற்று வலி வந்தது. டாக்டரிடம் காண்பித்த போது, நஞ்சுக் கொடி நார்மலாக இல்லை என்றும், அதிகமாக நடமாடாமல் இருக்குமாறும் கூறினார்கள்.



அவள் அழுத அழுகையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாபாவை கெட்டியாகப் பிடித்துக்கொள். நல்லவிதமாக நடக்கும் என்றேன்.



ஒருமாதம் சென்ற பிறகு மீண்டும் செக் அப் சென்றாள். போகும் போது, இந்தக் குழந்தையும் இல்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது அக்கா.. என்று கூறிவிட்டுச் சென்றாள். போய்..வா.. பாபா கூட இருக்கிறார் எனக் கூறி அனுப்பினேன். போகும்போது உங்கள் கையால் காசு கொடுங்கள் என்றாள். பாபாவை நினைத்துக் கொடுத்தேன்.



செக் அப் முடித்து வந்தவள்.. குழந்தையும் நன்றாக உள்ளது. நஞ்சுக் கொடியும் நன்றாக உள்ளதாக டாக்டர் ஆச்சரியத்துடன் கூறினார் என மகிழ்ந்தாள்.



அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது.. இன்று அக் குழந்தையின் வயது பன்னிரண்டு. குடும்பத்திலிருந்து பிரிந்துபோன ஒரு முதியவருக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சேர்ந்தார் அவர்.



நம்பியவர்களுக்கு பாபாவின் அருள் எப்போதும் உண்டு.



சாந்தி சீனிவாசன்,



காஞ்சீபுரம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...