Thursday, May 8, 2014

பாபாவின் மகிமை

sai-guide-us



நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 26 ல் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருகிறேன். இங்கு சாயி பக்தர் சம்பத்ராஜ் அடிக்கடி வந்து செல்வார். வரும் போதெல்லாம் சாயி மகிமைகளைக் கூறுவார். எந்த நேரத்திலும் பாபாவை நினையுங்கள், எப்போதும் உங்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார் என்பார்.



வாரந்தோறும் வியாழக்கிழமை விரதம் இருந்து பாபாவுக்கு பூஜை செய்து வருகிறேன். கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் பூஜை செய்து கொண்டிருந்த போது, எனது தந்தையார் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் என் மனைவி எனக்குத் தகவல் தெரிவித்தார்.



அதைக் கேட்டு கண்ணீருடன் பாபாவை துதிக்க ஆரம்பித்தேன். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். எனக்குத் திரும்பத் திரும்ப இதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. என் தந்தையைக் காணும் வரை பாபாவை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். என் தந்தையைப் பார்த்த பின்தான் அந்த அதிசயத்தைக் கண்டேன்.



சாலை விபததில் சிறு காயமும் இன்றி என் தந்தையை பாபா காப்பாற்றி விட்டார். அது மட்டுமின்றி, ஆறேழு நாட்களில் பூரண குணம் பெற்று வீட்டிற்கும்  வந்துவிட்டார்.



அதிலிருந்து பாபாவின் மகிமையை எனது நண்பர்கள், எனது வாடிக்கையாளர்களுக்கும் கூறிவருகிறேன்.



ஜி. மணிமாறன், நெய்வேலி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...