Friday, May 9, 2014

சாயி புத்ரன் பதில்கள்

Image நீங்கள் யாரை முன்னிறுத்தி அனைத்தையும் நடத்துகிறீர்கள்? யாரை முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்கள்?
(வி.எஸ். சுஜாதா, வேலூர் - 2)

நான் எப்போதுமே மரணத்தை முன்னிறுத்தித்தான் செயல்களைச் செய்கிறேன். அடுத்த மணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். கடவுளை மட்டுமின்றி, சாயி வரதராஜனை முன் மாதிரியாக வைத்துள்ளேன். கடவுள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சகாயர். அவரிடம் வேண்டியதைப் பெறலாம் என்ற தெளிவு கொண்டவர் சாயி வரதராஜன். இவர்களை விட வேறு முன்மாதிரி வேண்டாம் என்பது என் திடமான கருத்து.
நீங்களே உங்களுக்கு முன் மாதிரி. வேறு ஒருவரை தேடவேண்டாம் என்பது இதன் பொருள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...