Monday, May 19, 2014

மாறாத நம்பிக்கை!

baba



மனதில் இறைவன் அல்லது குருவின் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவரை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் தெய்வம் அல்லது குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால், நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். இவ்வளவு படித்தும் கஷ்டம் போகவில்லையே என புலம்புவதும் அறிவீனம். கடவுள் மீது என்றும் மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...