Tuesday, May 6, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 2

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 



எப்போதும் நாமாவை ஜபிக்க வேண்டும்:



சாமாவுக்கு நாமத்தின் மகிமையைப் பற்றிச் சொன்ன பாபா, நாமா மலை போன்ற பாவங்களையும் அழிக்கும். நாமம், தேகாபிமானத்தை உடைக்கும். நாமம் கோடிக் கணக்கான தீய நாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும். நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும். ஜனன மரண சுழலில் இருந்து விடுவிக்கும்.



முயற்சி செய்து, நாம ஜபம் செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் ஜபம் உன்னதமானது.



அந்த உணர்வு இல்லாமல் சும்மா சொன்னாலும் அதன் பலன் சோடை போகாது. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும்பலன் தரும். நம்மைப்பரிசுத்தப்படுத்திக் கொள்ள நாம ஜபத்தைவிட, சுலபமான வழி வேறு எதுவும் தேவையில்லை.



நாமமே நாக்குக்கு அணிகலன், நாமம் ஆன்மீக வாழ்க்கையை வளமாக்கும் உரம். நாம ஜபம் செய்வதற்கு நீராடத் தேவையில்லை, சடங்கு சாஸ்திரம் பார்க்கவேண்டியதில்லை. நாம ஜபம் செய்தால் மட்டும் போதுமானது. வேறு வித உபாசனை தேவையில்லை. நாம ஜபம் எல்லா பாவங்களையும் அழிக்கும் பவித்திரமானது.



பாபா சொன்னார்: ”எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வ காலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப்பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரை விட சிறந்தவராகிறார். என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தால், அக்கரை சேர்ந்துவிடுவீர்கள். வேறு உபாசனை ஏதும் தேவையில்லை. அதுவே மோட்சத்தை அளிக்கும். (அத்:27)



நாம ஜபத்தை எந்நேரமும் ஜபிக்கலாம். தடங்கலே கிடையாது, வழிபாடு செய்யக்கூடாத நாட்களிலும் நாம ஜபம் செய்யலாம்.பாபா பக்தராக விரும்புகிறவர், தனது பாவங்கள் போகவும், தான் பரிசுத்தமடையவும், வாழ்வில் உயரவும், இறைவனை அடையவும் நாம ஜபம் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...