Monday, May 26, 2014

தட்சணை

DSC_0005

 

பாபா பேசும்போது, ஏதோ கதை போல் சொல்வார். உருவகப்படுத்தி சொல்வார். மேம்போக்காக குறிப்பு ஒன்று சொல்வார்.



இது எல்லோருக்கும் தெரியாது. கேட்பவருக்கு அர்த்தம் அற்றது போல் தெரியும். இதற்கு நேரடி அர்த்தமும் கொள்ளக்கூடாது. மிகவும் ஆழ்ந்து யோசித்தால்தான் தெரிய வரும்.



ஒருமுறை ஒருவர் சீரடிக்கு வந்து பாபாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். அவரிடம் ”பாபா பற்றி என்ன நினைக்கிறீர்?”  என்றேன்.



அதற்கு அவர்,  “எப்போதும் காசு பற்றியே (தட்சணை) பேசும் ஒரு ஞானியை நான் இதுவரை கண்டதேயில்லை. என்ன ஞானி இவர்? “  என அலுத்துக்கொண்டார்.



என்னைப் பொறுத்தமட்டில் பாபா காசு காசு என்று சொல்வதெல்லாம் புண்ணியத்தைப் பற்றித்தான்.



தட்சணை புண்ணியத்தைக் குறிக்கும். அகங்காரத்தை அழிக்கும். நல்ல குணத்தை வளர்க்கும். பாபாவின் மகத்துவம் எல்லோருக்கும் தெரியாது.



கு.இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...