சம்சாரம் என்பது காமம் குரோதம் ஆகியவற்றினுடைய செயலேயாகும். எங்கு ஓடி ஒளிந்தாலும் சம்சாரத்தை விட்டுத்தப்பிக்கமுடியாது. பூர்வ கர்மாவின் பலன்களாலேயே இவ்வுலகில் குழந்தை பிறப்பதும் அதன் உறவினர் இறப்பதுமாகும். படைப்புக்கடவுளான பிரம்மனாலும் மாற்றமுடியாது.
பூர்வத்தில் செய்த நல்ல வினை தீவினையின் பலனை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். கர்மங்களினுடைய பலனாக உருவானதே இந்தப் பிறவியின் உடல். இதுவே தேகப்பிராப்தம் என்று அழைக்கப்படுகிறது. செல்வந்தன் வீட்டு நாய் மெத்தையில் படுத்து இருக்கும். வறியவன் வீட்டு நாய் குப்பையில் படுத்திருக்கும். இதுதான் தேகப்பிராப்தம்.
No comments:
Post a Comment