Friday, May 30, 2014

பெருங்களத்தூரில் அற்புதம்!

புதுக்கோட்டையிலிருந்து நானும் எனது மனைவியும் சென்னை வந்து பெருங்களத்தூரில் தங்கினோம். எனது மூன்றாவது மகனுக்கு விரைந்து திருமணம் நடக்க பெருங்களத்தூரில் பிரார்த்தனை வைத்தோம்.



பி.ஈ. படித்த வேலை பார்க்கும் பெண் பெருங்களத்தூரில் நிச்சயமாகி திருமணம் நடந்தேறியது. எனது இரண்டாவது மகனுக்கு வீடு கட்ட முயற்சி மேற்கொண்டேன். அந்த கோரிக்கையும் பாபாவின் அருளால் இனிதே நிறைவேறி, பணிகள் துவங்கி யிருக்கின்றன.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபா பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறார். அந்த அற்புதங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



மா மாயனான பாபா, பெருங்களத்தூரில் செய்கிற அற்புதங்களையும், நாள் தோறும் நிறைவேற்றித் தருகிற பிரார்த்தனைகளையும் என்னைப் போல நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



கஷ்டத்தில் இருப்பவர்கள் விரைந்து வந்து பலனடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.



ஸ்ரீநிவாச சுந்தரராஜன்,



புதுக்கோட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...