Saturday, May 24, 2014

பாபாவின் ஆசிர்வாதம் பெற…..

நான் சாய் ராம் கோயிலுக்குப் போகமுடியவில்லை..நேரமே கிடைக்கவில்லை.. பாபா மன்னித்துவிடுங்கள்..என்று வேண்டுகிற ரகமா நீங்கள்?



எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்குப் போவதை நிறுத்த மாட்டேன் என்கிறவரா நீங்கள்?



பாபா பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே தவிர, அவரை பூஜிப்பதிலோ, அவரது கோயிலுக்குச்செல்வதிலோ எனக்கு ஆர்வம் வருவதில்லை என்கிறவரா நீங்கள்?



நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விக்ஷயம்..



உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த வழியில் இறைவனை வணங்கினால் போதும். கோயிலுக்குப் போனால் நல்லது.. போகவில்லை, வீட்டில் அவரது பாடலைக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்..



சத்சரித்திரத்தை சி.டி. போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்..டி.வியில் லைவ்வாக ஆரத்தி பார்த்துக் கொண்டிருந்தேன் என எப்படி அவரை நினைத்தாலும் அவரை வழிபட்டதுதான். எந்த வழியில், என்ன முறையில் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்கிறவர் பாபா.



கண்களை  மூடி தியானிக்க வேண்டா,  ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜிக்க வேண்டா, புனித சரித்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டு பட்டும் படாமல் பாராயணம் செய்யவேண்டா..



பின்னர் என்னதான் செய்வது?



அவர்  நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருங்கள். அது போதும்.. சத்சரித்திரம் நமக்கு ஒரு வழிபாட்டை சொல்லித் தருகிறது.



”நீங்கள் உங்களது உலகக் கடமைகளை செய்து கொண்டோ, கவனித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனதை சாயிக்கும் அவரது கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்..”



சிலர்.. நானும் இப்படித்தான் செய்கிறேன்.. ஆனால் பாபாவை சமயங்களில் நினைக்கமுடியவில்லை என்கிறார்கள். இதைவிட சுலபமான வழியைச் சொல்கிறேன்..



பாபாவின் உருவப் படங்களை சுவரில் மாட்டி வைப்பது, ஸ்டிக்கர்களாக வாங்கி ஆங்காங்கே ஒட்டி வைப்பது, அவரது அருளுரைகளை எழுதி கண்ணில் படும் இடங்களிலும், கைகள் தொடும் இடங்களிலும் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அப்போது அவரது நினைவு வந்துவிடும்.



அதிகாலையில் உறங்கி எழுந்திருக்கும்போதே, பாபாவை நினைத்துக் கொண்டு எழுந்திருங்கள்.. நாள் முழுக்க அவரது நினைவு இருக்கும்.



இந்த நினைவு உங்களது எல்லா  கஷ்டங்களையும் விலக்கி சர்வ மங்களங்களைக் கொண்டு வரும்.

1 comment:

  1. ஓம் சாய் ராம், ஓம் சாய் ராம், ஓம் சாய் ராம்

    ReplyDelete

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...