Friday, November 1, 2013

வெள்ளி சிம்மாசனம்



     கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதற்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர்.  சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணெயைப்போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணெய் சூடுபடுத்தினால்தான் உருகுகிறது; ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது. 

     நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?
 

     அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க 

முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னா­லிருந்து அவருக்கடியில் 

திணிக்க முயன்றால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் 

வகையில், அதை எதிர்த்து அவர் போராடப்போவதில்லை. 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...