Saturday, November 30, 2013

சாயிபாபா என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்

நான் 2009 ஆம் ஆண்டு முதல் தீவீரமான சாயி பக்தராக உள்ளேன். எனக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆகவே நான் பிப்ருவரி ஏழாம் தேதி முதல் சாயி விரதம் இருக்கத் துவங்கி மயிலாப்பூர் ஆலயத்துக்கு சென்றேன். விரதத்தையும்  அன்று முதல் துவக்கினேன். அதனால் நான் சந்தோஷமாக உள்ளேன் என்பதின் அர்த்தம் அல்ல. நான் அழைக்காமல் யாரும் என்னிடம் வர முடியாது என்று பாபா கூறுவார். எனக்காக நீங்களும் பாபாவிடம் வேண்டுங்கள். என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றுதான்  ஒன்பது வார விரதத்தை துவக்கினேன். பாபா என் வேண்டுகோளை நிறைவேற்று என்று உன்னையே வேண்டுகிறேன்.  நான் மிகவும் சங்கடத்தில் இருக்கிறேன். பாபா என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். பாபா என்மேல் கருணைக் காட்டுங்கள். நான் ஒன்பது வார விரதத்தை நல்லபடி முடிக்க நீங்கள்தான் துணை இருக்க வேண்டும். என்னுடைய பூர்வஜென்ம  கர்மாக்களை ஒழித்து என்னை பாபாதான் நீதான் காத்தருள வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...