தம் பக்தர்களின் இல்லங்களில் உணவுக்கும்
உடைக்கும் எந்தவிதமான பற்றாக்குறையும் இருக்காது என்று ஸாயீ உறுதிமொழி
கொடுத்திருப்பது ஸாயீபக்தர்களுக்கு எப்பொழுதுமே தெரிந்த விஷயந்தான்.
''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும் நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என்னுடைய ஸத்தியப் பிரமாணமாகக் கருதுகிறேன்.”
ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸாயீ திருவாய்மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா.
''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும் நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என்னுடைய ஸத்தியப் பிரமாணமாகக் கருதுகிறேன்.”
ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸாயீ திருவாய்மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா.
இறைவனின் அரசசபையில் கௌரவம் தேடுங்கள்; அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள்; அவருடைய பிரஸாதத்திற்காகவே முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர்.
பாராட்டுபவர்களுடைய தலையசைப்பை நாடி உன்னுடைய கவனம் ஏன் திரும்ப வேண்டும்? உன் இஷ்ட தெய்வமன்றோ காருண்யத்தினால் உருகி வியர்வையைத் 'தபதப’ வென்று பெருக்க வேண்டும்.
அந்த லட்சியத்திற்கு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பாடுபடு. புலன்கள் அனைத்தும் பக்திப் பெருக்கால் மூழ்கடிக்கப்பட்டு, புலனின்ப நாட்டங்கள் எல்லாம் பக்தியுடன் கூடிய வழிபாடாக மாற்றம் எய்தட்டும். ஓ, அந்நிலை எவ்வளவு அற்புதமானது!
இம்மாதிரியான வழிபாடு இதர வழிகளில் ஆசை வைக்காது என்றென்றும் நிலைக்கட்டும். மனம் மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, என்னுடைய நாமஸ்மரணத்திலேயே நிலைத்து நிற்கட்டும்.
மனம் அந்நிலையில் உடருந்தும் குடும்பத் தொல்லைகளிருந்தும் பணத்தாசையிருந்தும் விடுதலை பெற்று ஆனந்தமயமாக இருக்கும்; ஸமதரிசனத்தையும் பிரசாந்தத்தையும் (பேரமைதியையும்) அடைந்து, கடைசியாக பரிபூரணத்துவத்தையும் அடையும்.
சாந்தி நிறைந்த மனம்
ஞானிகளின் ஸத் ஸங்கத்தில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. ஒரு பொருளிருந்து
இன்னொரு பொருளுக்கு ஸதா அலையும் ஓய்வில்லாத மனத்தை இறைவனுடன் ஒன்றியதாக எப்படிக்
கொள்ளமுடியும்?
ஆகவே, கதை கேட்பவர்களேõ இப்பிரவசனத்தை பக்தியுடன் கேட்கும்போது முழு கவனத்தையும் கேள்வியின்மேல் வையுங்கள். ஸாயீயின் இச் சரித்திரத்தைக் கேட்டு உங்களுடைய மனம் பக்தி நிரம்பியதாக ஆகட்டும்.
காதை முன்னேறும்போது திருப்தியைக் கொண்டுவரும்; சஞ்சலமான மனம் விச்ராந்தியடையும்; எல்லாக் கொந்தளிப்புகளும் அடங்கும்; சாந்தியும் சந்தோஷமும் ஆட்சி செய்யும்.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment