Sunday, November 24, 2013

முழு முதற்பொருளே பாபா!

             
              பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; பு­லியும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவிவந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைக்குகந்த புக­டம் அவர். 
     செவிமடுப்பவர்களே! ஸாயீ எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பனபற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவே.
      நான்கு முழம் நீளமும் ஒரு சாண் அகலமுமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களி­ருந்தும் கந்தைத் துணிகளால் பிணைக்கப்பட்டு தூலத்தி­ருந்து ஓர் ஊஞ்சலைப்போல் தொங்கவிடப்பட்டிருந்தது. 

      அந்தப் பலகையின்மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது. 
        அப்பலகையின்மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார்; அல்லது உறங்கிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின்மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.
      பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கப்பட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவைத் தாங்கியது? அஷ்டமகாசித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால், பலகை எல்லாம் பெயரளவுக்குத்தானே.

ஸ்ரீ சாயிசத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...