Saturday, June 18, 2016

உனக்குச் செல்வம் வந்து சேரும்!



இறைவன் எப்போதும் நமக்கு அருள் செய்வதற்குத்தயாராகவே இருக்கிறார். நாம் தான் அதைப் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. நமது செயல்களால் அவருடைய அருளைப் பெறும் தகுதியை இழந்துவிடுகிறோம்.
ஒரு கஞ்சன் இருந்தான், அவனிடம் சிவன் கோயில் கட்ட பணம் தந்தார்கள். அதை சரிவர அவன் செலவிடவில்லை. அவனது மனைவி கனவில் தோன்றிய சிவன், நீயாவது எனக்குக் கோயில் கட்டு, தேவையானதை நான் தருகிறேன் என்று கூறினார்.
அப்பெண்மணி தனது கனவு பற்றி கணவரிடம் தெரிவித்தாள். அவனோ இது சரியானதல்ல என்று எடுத்துக்கூறியும் கேளாமல் கோயில் கட்டும் பணியில் இறங்கத்தீர்மானித்து, தனது வீட்டில் தனக்கு சீதனமாகத் தந்த நகை அனைத்தையும் விற்று கோயில் கட்ட முன் வந்தாள்.
இந்த விஷயத்தை அறிந்த கணவன் ஒரு நல்ல நாளில், மனைவியின் நகைகளை தானே எடுத்துக்கொண்டு அதற்கு ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு செய்து பணத்தை அளித்தான்.
அந்த நிலம் டுபகி என்ற பெண்ணுடையது. அவள் இதை பணக்கார கஞ்சனிடம் இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாள். இந்த நிலத்தைத் தன் மனைவி பெயருக்கு எழுதிக் கொடுத்து இதை சிவனுக்கு அர்ப்பணி என்றான்.
சிறிது காலத்தில் கஞ்சன், அவன் மனைவி, நிலத்துக்குச் சொந்தக்காரி யான டுபகி ஆகியோர் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்கள்.
மறுஜென்மத்தில் கஞ்சன் வீர பத்ரப்பா என்பவனாக பிறக்க, அவன் மனைவி கவுரி என்ற பெயருடன் அந்த சொத்துக்கு பாத்தியதை உள்ள குடும்பத்தில் பிறந்தாள். நிலத்தை ஏமாந்த டுபகி சனபசப்பா என்ற பெயரில் பிறந்தாள்.
கவுரியை வீர பத்ரப்பா திருமணம் செய்துகொண்டான். அவன் பிறவி ஏழையாக இருந்தான். கவுரி சாயி பக்தை. இதனால் ஏழையான வீர பத்ரப்பா சாயியை சரண் அடைந்து தனது கஷ்டத்தைப் போக்க வேண்டி நின்றான். அவனை ஆசுவாசப்படுத்தி, பாபா ஆசிர்வதித்தார்.
பாபாவின் ஆசியால் கவுரியின் நிலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போனது. வாங்கியவர் பாதிப் பணம் ரொக்கமாகவும் மீதிப் பணத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக வட்டியும் முதலும் ஆகவும் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பணம் முழுவதும் கவுரிக்குச் சேர வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்ட போது, சனபசப்பா எழுந்து, சிவனுக்கு எது சமர்ப்பணம் செய்யப்பட்டாலும் அதன் மீது உரிமை உள்ளவன் நான். எனவே, எனக்கு வருட வட்டியில் பாதி தரவேண்டும் என்றான்.
வீரபத்ரப்பா எதையும் தரத் தயாராக இல்லை. எனவே சண்டையிட ஆரம்பித்தார்கள்.
பாபா சண்டையை விலக்கி, சனபசப்பாவுக்கு பாதி வட்டியைத் தருமாறும், வீரபத்ரப்பாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதைக் கேட்ட வீரபத்ரப்பா பாபா மீது கோபப்பட்டான். மொத்த பணத்தையும் பாபாவே பிடுங்கிக் கொள்ள நினைக்கிறார் என அவரிடம் நேரடியாக சண்டையிட்டான். பணத்தைக் கேட்டு வந்தால் சனபசப்பாவைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான். மிரட்டி வாழ்ந்த வீரபத்ரப்பா நாகமாகவும், பயந்து வாழ்ந்த சனபசப்பா தவளையாகவும் பிறந்தார்கள் என்பது சத்சரித்திரத்தில் பாபா சொன்ன கதை.
நாம் விஷயத்திற்கு வருவோம். கணவனோ மனைவியோ உங்களில் யாரேனும் ஒருவர் பூர்வத்தில் பாபாவுடன் தொடர்பில் இருந்தவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். பூர்வ ஜென்மத் தொடர்பு இன்றி யாரும் சாயி பக்தராகமுடியாது.
பூர்வ வினையின் காரணமாக கஷ்டத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதை நீக்க அவரிடம் வேண்டுதல் வைத்துள்ளீர்கள்.
நிச்சயமாக நீங்கள் எதிர்பாராமல் பலன் தருவார் பாபா. இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது என்று உறுதி தந்திருக்கிறார்.
இந்தப் பணமும் உங்கள் மனைவி வாயிலாக வரப்போகிறது என்பதில் தெளிவாக இருங்கள். மனைவிக்கு வேண்டியவர் அல்லது அந்த சொத்தில் பாத்தியதை உள்ள யாரோ ஒருவர் உங்களிடம் பங்கு கேட்கப் போகிறார்.
உங்கள் கஷ்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், அவர் கேட்கிறதைத் தந்துவிட்டு, மீதம் உள்ளதை மனைவியின் அனுமதியோடு செலவு செய்யவோ, கடனை அடைக்கவோ முயற்சி மேற்கொள்ளுங்கள்.
பாபா தரக்கூடியதை பாபாவுடையது என்ற எண்ணத்துடன் அனுபவிக்க வேண்டும். பணம் வர வர மனம் மாறிவிடக்கூடாது. ஒருவேளை மாற நேர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பணத்தை சம்பாதி!
ஒருவனுக்குச் சிறப்பு தருவது பணம். பணம் இல்லாதவனைத் தாயே நிந்திப்பாள், தந்தை மகிழ்ச்சியடையான், உடன் பிறந்தவர்கள் பேசமாட்டார்கள், பணியாளன் கோபிப்பான், மகன் அப்பா வழி நடக்கமாட்டான், மனைவி தழுவமாட்டாள். தன்னிடம் பணம் கேட்பான் என பயந்து நண்பனும் ஒதுங்குவான். ஆகவே, என் குழந்தாய்! பணத்தை சம்பாதி, தேவைக்கும் தானத்திற்கும் போக, நீ மீதியை பத்திரப்படுத்து. அது உனது மரியாதையை அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...