Saturday, June 25, 2016

மகிழ்ச்சி....



ஒரு அழகான பெரிய பணக்காரியான, அதிக விலை மதிப்புள்ள உடை உடுத்தி, ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.  ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே. என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள்” என்றாள்.
கவுன்சிலிங் செய்பவர்,  அவரின் அலுவலகத் தரையை கூட்டிக்கொண்டிருந்த அவரது அலுவலகப் பணி பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது இந்த பணிப் பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார். அந்த பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்து விட்டார். அவர் இறந்த மூன்றாவது மாதமே என் மகன் ஒரு விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்கக் கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் மளமளவென குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக அன்றுதான் புன்னகைத்தேன்.
நான் அப்பொழுது என்னையே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு சிறு விஷயமே என்னை இவ்வளவு சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கும் செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு குடிப்பதற்கு கஞ்சி தயாரித்துக்கொடுத்தேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு சிற்சில உதவிகள் செய்து, அதனால் அவர்கள்  மகிழ நானும் அதன் மூலம் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டுக் கொண்டேன்." இவ்வாறு வேலைக்காரி சொல்லி முடித்தாள்.
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை. வாழ்க்கையின் அழகு என்பது நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை...உன்னால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பதுபோய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வது அல்ல அது ஒரு முடிவு... 
நீ என்ன வைத்திருக்கிறாய் என்பதில் இல்லை மகிழ்ச்சி...
நீ யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
" மகிழ வைத்து மகிழுங்கள். .உலகம் உங்களை கண்டு மகிழும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...