Wednesday, June 22, 2016

சாயி புத்ரன் பதில்கள்

நீங்கள் அமைக்கிற கோயிலுக்கும் பிறர் அமைக்கிற கோயிலுக்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்வீர்களா?
ஜி.கே.பிரசன்னா, மேல் மருவத்தூர்
சாயி புத்ரன் பதில்கள்
நிச்சயமாக! என் தந்தையார் என் வீட்டில் இருப்பதற்கும் அலுவலகத்திற்குச் செல்வதற்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரிகிறது. அலுவலகம் செல்வது பிறருக்காக, என் வீட்டில் இருப்பது எனக்காக. நான் அமைத்த கோயில்கள் அனைத்திலும் அவர் எனக்காகவே எழுந்தருளினார் என்பதை என்னால் எப்படி மறக்கமுடியும்

நீங்கள் யாருடைய மகன்?
ஆர். ஜோதி, சென்னை-63
சாயி புத்ரன் பதில்கள்
நான் சிவன் மகன் என்பதை அறியாதவர்கள்தாம், எவன் மகன் எனக் கேட்டுக் குழம்புவார்கள். என்னை அறியாதவர்கள் என்னை அனுப்பியவரையும் அறிய மாட்டார்கள்; என்னை அறிந்தவர்கள் என்னை அனுப்பியவரையும் அறிந்திருக்கிறார்கள். நான் சாயி புத்ரன் ஆவேன்.

உடம்பைப் பார்த்து இது மிகவும் கேவலமாக இருக்கிறது என்று எண்ணுவது உண்டா?
பி. சத்யா, சத்துவாச்சாரி வேலூர்
சாயி புத்ரன் பதில்கள்

முன்னம் உடலை இழுக்கென்றிருந்தேன். அதுவே அவன் உறையும் ஆலயம் என்று உணர்ந்து மனம், புத்தி, புலன் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிற இந்த உடலைத்தான் பகவானிடம் ஈடுபடுத்துகிறேன். ஆகவே, தோற்றத்தைக் குறித்து ஒரு நாளும் நான் வெட்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...