Saturday, May 14, 2016

பாபா எனது உயிரைக் காப்பாற்றினார்



எனது கணவர் வேலைக்குச் செல்பவர். இரண்டு மகன்களில் மூத்தவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். இளையவன் வெளியூரில் தங்கிப் படிக்கிறான்.
கடந்த பொங்கல் அன்று காய்ச்சல் ஏற்படுவதுபோல் இருந்தது. இது அடிக்கடி ஏற்படுகிற விஷயம் என்பதால் வழக்கம் போல மாத்திரை போட்டுக் கொண்டு ஓய்வு எடுத்தேன். சமைக்க முடியாததால் வெளியில் உணவு வாங்கித் தந்துவிட்டு கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார்.
உதவிக்கு யாருமில்லாத நிலையில், சட்டென்று இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் நாடித்துடிப்பு ஆகியவை குறைய ஆரம்பித்துவிட்டது. தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
எங்கள் வீட்டின் அருகே மெடிக்கல் கடை வைத்திருக்கும் கண்ணன் என்பவருக்கு போன் மூலம் தகவல் சொன்னேன். என்னால் பேசக்கூட முடியாத நிலையிருப்பதை உணர்ந்த அவர், பக்கத்திலிருந்த ஈஸ்வரி என்ற செவிலியருக்குப் போன் செய்து என நிலையைக் கூறியிருக்கிறார். உடனடியாக வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து நான் அபாயக் கட்டத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன ஈஸ்வரி, உடனடியாக வீட்டிலேயே டிரிப்ஸ் ஏற்றினார்.
அவர் என் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோதுதான் எனக்கிருந்த அபாய நிலைமை எனக்கே தெரிந்தது. சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தேன்.
வழக்கமாக மாத்திரை மட்டும் கொடுத்தனுப்பும் கண்ணன் அண்ணா அவர்கள், தாமாக ஈஸ்வரிக்குப்போன் செய்து தகவலைச் சொல்லி அவர் வந்து சிகிச்சை தந்திராவிட்டால் ஒரு மணி நேரத்தில் என் வாழ்வு முடிந்திருக்கும். அன்று பாபா நிகழ்த்திய அற்புதத்தால் அன்று அவரது மகிமையைச் சொல்லும் சாட்சியாக நிற்கிறேன். அவரைச் சரணடைந்தால் கைவிடமாட்டார் என்பதற்கு நானே ஓர் உதாரண சாட்சி.

திருமதி ராணி, தாசில்தார் நகர். அண்ணாநகர், மதுரை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...