Monday, May 30, 2016

பாபாவின் அனுமதியில்லாமல்….

ஒரு முறை பாபாவை காணவந்த சிலர், அவரைப் புகைப்படம் எடுக்க
அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதலில் மறுத்த பாபா தனது பாதங்களை
மட்டும் படம் எடுத்துக்கொள்ளுமாறு பின்னர் கூறினார். இந்த அனுமதியை
வைத்து அவர்கள் பாபாவை முழுவதுமாகப் படம் பிடித்தார்கள். ஒருவர்
பாபாவின் அனுமதியின்றி பாபாவைப் படம் பிடித்தார். நெகடிவ்வைக் கழுவி பிரிண்ட் போட்டபோது படத்தில் பாபாவின் பாதம் மட்டும் பதிவாகியிருந்தது.
பாபா அனுமதியில்லாமல் படம் எடுத்தவரின் புகைப்படத்தில் அவருடைய
சொந்த குருவின் உருவம் பதிவாகியிருந்தது. இவை டாக்டர் கவாங்கர்
என்பவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: சாயியின் திருவிளையாடல் புத்தகம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...