Thursday, May 5, 2016

யோக நிலையின் பலன்

யோக நிலையால் பலன் என்ன?
(பி.ஆர். சத்யசீலன், மதுரை)
யோகநிலை என்பது மோன நிலையாகும். அதாவது மவுனமாக அமர்ந்து தன் மனதை ஓரிடத்தில் குவிக்கிற நிலையாகும். இதை மனம் ஒருமுனைப்பட்ட நிலை என்றும் கூறலாம். இந்த நிலையை அடைந்துவிட்டால், ஒருவனுடைய கர்மப்பலன் அவனுக்கு எதிரானதாக இருந்தாலும், அவன் அதர்மம் செய்கிறவனாக இருந்தாலும், இவற்றின் தாக்கம் குறையும்போது அவனை பிரம்மத்தோடு இணைத்துவிடும்.
இந்த நிலையை அடைவதற்கு உடம்பையும், மனத்தையும் நமது விருப்பத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதற்கு கடுமையான பயிற்சி தேவை. இதைத்தான் பாபா ”தண்டால் எடு” என குறிப்பிட்டார்.
சிறிது சிறிதாகப் பழகி மனதை ஒருமுனைப்படுத்திக்கொள்வதற்கு சாதனை என்றும், இதைச்செய்பவனுக்கு சாதகன் என்றும் பெயர். சாதனையை நிறைவேற்றும் நிலையில் மனதில் பற்று இல்லாத தன்மை தோன்றும். இது தோன்றியதும் வைராக்கியம் தோன்றும். வைராக்கியம் ஏற்பட்ட பிறகுதான் நமது கர்ம வினை தடுத்தாலும் கடவுளை நம்மிடமிருந்து பிரிக்க முடியாத நிலை தோன்றும். இதுவே யோகநிலையால் விளையும் பலன் ஆகும்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...