Monday, May 23, 2016

ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார்



ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்வது "நான் ஒரு பிச்சைக்காரன். நான் என்ன உனக்குக் கொடுக்க முடியும்? என்னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சை கேட்காதே. கடவுளை மறக்காதே, எந்தப் பெயர் வேண்டுமானாலும் சொல். ஆனால் நாமஸ்மரணம் செய். என் அப்பா ராமா உனக்கு அருள் புரிவார், அருணசலேஸ்வர் அருள் புரிவார்."

இவரின் குரு ஸ்ரீ பாப்பா ராம்தாஸ் சுவாமிகள் இவருக்கு ஓதிய மந்திரம் "ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்". இதை 24 மணி நேரமும் ஜபிக்கச் சொன்னார்.

யோகிக்கும் குமாரி நிவேதிதாவுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய உரையாடல்:
குருஜி : "நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நிவேதிதா : "துக்கம், சுகம், இன்பம், துன்பம்  என்பவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் தாங்கள்"
குருஜி : "கல் கூடத்தான் இவைகளால் பாதிக்கப்படாதவை."
நிவேதிதா : "கல் சுத்தியால் தட்டினால் உடைந்துவிடும்"
குருஜி : "என் காலும் அப்படித்தான்"
நிவேதிதா " "நீங்கள் உடல் இல்லை. உங்கள் உடலுக்கு ஒருவிதமான பாதிப்பும் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல் நீங்கள் யார் என்னென்ன உருவத்தை நினைக்கிறார்களோ அந்த அந்த உருவத்திலும் வருவீர்கள்".

வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் யோஹியைப் பற்றி பாடிய பாடல் :

தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ

யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
யோகி ராம்சூரத்குமார்
ஜெய் குருராயா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...