Tuesday, May 10, 2016

ஆஸ்திகனும் நாஸ்திகனும்


ஆஸ்திகனும் நாஸ்திகனும் இரு நண்பர்கள். ஒருவர் ஆஸ்திகர், மற்றவர் நாஸ்திகர். ஒரு நாள் நாஸ்திகர் சொன்னார்: ”நண்பா நீர் தியாகி. பக்தி, தர்மம், தெய்வம் இவற்றுக்காக உலக வாழ்வின் வசதிகள் சகலத்தையும் மறந்துவிட்டீரே, உமது திடமான  கொள்கை ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன்”.
ஆஸ்திகர் பதில் சொன்னார்: ” நண்பரே நீர் தானே என்னைவிடப் பெரிய தியாகி. உமது கொள்கைக்காக நீர் பலரும் போற்றிவரும் தெய்வத்தையே தியாகம் செய்து விட்டீரே, இது மேலான காரியம்”.
வேதாந்த லஹரி


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...